புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை அறிவித்தார். இதே போல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய், விரைவில் 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.