அரசியல்

"18 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

* காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளின் எம்எல்ஏக்களிடம் இருந்து, கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்காக செலவிட்ட பணத்தை வசூலித்து, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவு செய்ய உத்தரவிட கோரி ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

* அதுவரை தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிய இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

* அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல் ஏக்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* மேலும், இந்த வழக்கு இடைத்தேர்தலை நடத்த ஒருபோதும் இடையூறாக அமையாது என்றும், இதனை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிப்போட தேவையில்லை எனவும் தெரிவித்து வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்