#nirmalasitharaman #westbengalelection2026 நெசவாளர் வீட்டில் மதிய உணவு அருந்திய நிர்மலா சீதாராமன் மேற்கு வங்க மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புர்பா பர்தமான் பகுதியில் உள்ள ஒரு நெசவாளர் இல்லத்தில் எளிமையாக மதிய உணவு அருந்தினார். மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தந்து நெசவாளர் சுகுமார் ஹல்தார் என்பவரின் வீட்டிற்குச் சென்று, தரையில் அமர்ந்து நெசவாளர் குடும்பத்தினருடன் பாரம்பரிய முறையில் மதிய உணவை அருந்தினார். பின்னர், நெசவாளர்களின் தற்போதைய வாழ்வாதார நிலை குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் நேரில் கலந்துரையாடி கேட்டறிந்தார். "