அரசியல்

"பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது" - வெங்கையா நாயுடு

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புனேயில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் பேசிய வெங்கையா நாயுடு, நாம் பெண்களை தாயாகவும், சகோதரியாகவும் கருதும் சூழலில், சமீபத்திய சம்பவங்கள் வெட்கக்கேடானது என்றார். அனைவருக்கும் விடுக்கப்பட்ட சவால் இன்று, என்றும், இந்த அட்டூழியங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு சபதம் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஒரு மசோதா கொண்டு வரப்பட்டதை நினைவுகூர்ந்த வெங்கய்ய நாயுடு, ஆனாலும் பிரச்சினை தீர்க்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினார். சமூக தீமைகளை கொல்வதற்கு மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை என்று வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டார். குற்றங்களின் தலைநகராக இந்தியா மாறி வருவதாக சிலர் பேசுவதை சுட்டிக்காட்டிய வெங்கய்ய நாயுடு, நாட்டை யாரும் இழிவுபடுத்தக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்