நீட் ரத்தாகும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர் ஷாஜகான் அறிவிப்பு நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருப்பது நமக்கு முக்கியமல்ல நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் எனவும், கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை நமது போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்