அரசியல்

"நீட் தேர்வினால் எந்த நன்மையுமில்லை" - தமிழக எம்.பி கவுதம் சிகாமணி பேச்சு

"தேசிய மருத்துவ சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு"

தந்தி டிவி
நீட் தேர்வினால் எந்த நன்மையுமில்லை என மக்களவையில் தி.மு.க. எம்.பி. கவுதம் சிகாமணி தெரிவித்துள்ளார். இதனால் பயிற்சி மையம் 12 ஆயிரம் கோடி லாபம் பார்ப்பதாக குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தேசிய மருத்துவ சட்ட திருத்த மசோதாவை தி.மு.க. கடுமையாக எதிர்ப்பதாகவும், இந்த விவகாரத்தில் மாநிலம் மற்றும் மருத்துவ பல்கலைக் கழகங்களின் உரிமை பறிக்கப்படுவதாக கவுதம் சிகாமணி பேசினார். மேலும், கள்ளக்குறிச்சியில், மருத்துவக் கல்லூரி அமைப்பதோடு மட்டுமின்றி ஆத்தூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் கோரினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்