அரசியல்

"தொகுதிகளை சொர்க்க பூமியாக மாற்றுவோம்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில், நாங்குநேரி தொகுதி வாக்களர்களுக்கு நன்றி சொல்லும் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சீனிவாசன், செல்லூர் ராஜூ,விஜயபாஸ்கர், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வளர்மதி, சரோஜா, வெல்லமண்டி நடராஜன், ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, பாஸ்கரன் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி உள்ளிட்ட சட்டமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மாபெரும் வெற்றியை தந்த நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளை சொர்க்கபூமியாக மாற்றும் திட்டங்களை கொண்டுவருவோம் என்று வாக்குறுதி அளித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு