அரசியல்

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் - நீக்க கோரி தி.மு.க உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்க கோரும் தி.மு.க-வின் மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் இறந்தவர்கள் பெயர் இடம்பெற்றிருப்பதாக மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது. குறுக்கிட்ட தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், மனுதாரரின் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக கூறினார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக 10 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை