அரசியல்

"தன்னாட்சி அதிகாரத்தை மீண்டும் வழங்குவோம்" - எம்.பி. திருச்சி சிவா

தந்தி டிவி

டெல்லியின் நிர்வாக விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் டெல்லி தேசிய தலைநகர் பகுதி அவசர சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதா மீது திமுகவின் சார்பாக பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா மசோதாவை எதிர்ப்பதாக குறிப்பிட்டார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல் என குறிப்பிட்ட அவர், மசோதா அநீதியானது மட்டும் இன்றி தேவையற்றது என குறிப்பிட்டார்.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரிய நிலையில் தற்போது இந்த மசோதாவை கொண்டு வர வேண்டிய தேவை என்ன வந்தது என கேள்வி எழுப்பினார். ஜனநாயக நடைமுறையில் ஒரு நாள் ஆளும் கட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்படும் என்றும், திமுக எம்.பி. திருச்சி சிவா சாடினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை