அரசியல்

"பொங்கல் நாளில் ஹைட்ரோகார்பன் எடுக்க டெண்டர் விடுப்பதா?" - திமுக எம்.பி. டி.ஆர். பாலு, சரமாரி கேள்வி

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று முழங்கும் பிரதமர், குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயம் என்ன? என திமுக எம்.பி. டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று முழங்கும் பிரதமர், குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயம் என்ன? என திமுக எம்.பி. டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசிய அவர், 2022-குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்ற அறிவிப்பு எவ்வாறு சாத்தியம் என வினவினார். பயிர்க் கடன், பயிர் காப்பீடு விளை பொருளுக்கு உரிய விலை ஆகியவை கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டிய டி.ஆர். பாலு, புயல் தாக்குதலுக்கு உரிய மீட்பு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். பொங்கல் கொண்டாட்டத்தின் போது, காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க, அமைச்சர் டெண்டர் விடுக்கிறார் என எம்.பி. டி.ஆர். பாலு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்