MP Kanimozhi | "வலிமை இல்லாதவர்கள் மதத்தை பயன்படுத்துகிறார்கள்" - எம்.பி. கனிமொழி பரபரப்பு பேட்டி
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் எப்படி கும்பாபிஷேகம் நடத்தப்படுவது என்பது குறித்து அறநிலையத்துறையும், பக்தர்களும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் அதை முடிவு செய்ய முடியாது என்றும் சீமானுக்கு திமுக எம்.பி கனிமொழி பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் அதிநவீன விளையாட்டு கூடத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து கேட்டதற்கு, வலிமையாக இல்லாதவர்கள் மதத்தை பயன்படுத்தி ஒரு இடத்தை தேடி கொண்டிருப்பதாக கூறினார்.