அரசியல்

தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் - பிரதமர் மோடிகேள்வி

தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் தேர்தல் நடைபெறும் வேளையில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருவதாக ஒருசாரார் கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் கூறினார். ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் போது, அவர்களை கொல்ல தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என்றும் மோடி கேள்வி எழுப்பினார். பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு எதிர்க்கட்சிகள் அச்சப்படுவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி