அரசியல்

தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் - பிரதமர் மோடிகேள்வி

தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் தேர்தல் நடைபெறும் வேளையில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருவதாக ஒருசாரார் கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் கூறினார். ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் போது, அவர்களை கொல்ல தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என்றும் மோடி கேள்வி எழுப்பினார். பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு எதிர்க்கட்சிகள் அச்சப்படுவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?