அரசியல்

நாகை எம்பி மறைவு.. ``ஈடு செய்யவே முடியாது'' - வேதனைப்பட்ட முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

நாகை எம்பி செல்வராசு மறைவு, டெல்டா மாவட்ட மக்களுக்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 1975-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராசு, அரை நூற்றாண்டு காலம் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். 4 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்டா மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்கள் வேண்டியும், மக்களின் உரிமைகளுக்காவும் பல போராட்டங்களை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை