அரசியல்

நாகை எம்பி மறைவு.. ``ஈடு செய்யவே முடியாது'' - வேதனைப்பட்ட முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

நாகை எம்பி செல்வராசு மறைவு, டெல்டா மாவட்ட மக்களுக்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 1975-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராசு, அரை நூற்றாண்டு காலம் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். 4 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்டா மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்கள் வேண்டியும், மக்களின் உரிமைகளுக்காவும் பல போராட்டங்களை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்