நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற எம்.ஜி.ஆர் பட பாடலை முதலமைச்சர் ஸ்டாலின் பாடியது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் திருப்பெயர் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அப்போது, நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற எம்.ஜி.ஆர் பட பாடலை பாடி தனது உரையை முதலமைச்சர் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், வாலியின் கவிதை வரிகளுக்கு ஏற்ப இந்த மாநாடு அமைந்திருப்பதாக குறிப்பிட்டார்.