அரசியல்

"அடாவடியாக செயல்படும் போக்கினை திமுக அனுமதிக்காது" - திமுக தலைவர் ஸ்டாலின்

பெண்களிடம் வரம்பு மீறி நடந்து, ரவுடித்தனத்தில் ஈடுபடுவோர் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

பெரம்பலூரில், பியூட்டி பார்லர் நடத்தி வரும் சத்யா என்ற பெண்ணை, திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருந்த செல்வகுமார் என்பவர், குடிபோதையில் சரமாரியாக தாக்கியுள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாக நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பெண்ணை தாக்கிய செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு-வெறுப்புகள் இவற்றின் காரணமாக அடாவடியாக செயல்படும் போக்கினை தி.மு.க. அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.

பெண்களிடம் வரம்பு மீறி, ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கட்சி விதிகளின்படி கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு