Minister Vanni Arasu | Politics | "இது பெரும் ஏமாற்று வேலை.." அமைச்சர் வன்னி அரசு காட்டம்
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண்பதாக மத்திய அரசு அமைத்துள்ள நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்நிலைக் குழு ஒரு ஏமாற்று வேலை என அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் குழுவின் 101 பரிந்துரைகளையே முழுமையாக நிறைவேற்றாத மத்திய அரசு, தற்போது மீண்டும் ஒரு கண்துடைப்பு குழுவை அமைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வதே மாணவர்களுக்கான ஒரே தீர்வு என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.