தீபாவளியையொட்டி, சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வரும் சூழலில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர், டிக்கெட் கட்டணம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டை விட அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதேபோல கார்கள், பைக்குகளில் பயணிப்போர், E.C.R., O.M.R. சாலைகளை பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.