அரசியல்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாள் நியமனம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில்,லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாளை விசாரணை அதிகாரியாக நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

* இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்ய நாராயணன் - ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

* மேலும், வழக்கின் இடைக்கால அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தனர். வழக்கு சம்பந்தமாக அதிகப்படியான சாட்சியங்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கால அவகாசம் கோரினர்.அதையடுத்து வழக்கின் நிலை அறிக்கையை அக்டோபர் 8-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி