அரசியல்

"அணுக்கழிவு சேமித்து வைக்கும் விவகாரம்" : மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி - அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

தந்தி டிவி

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

தயாநிதி மாறனுக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறனை, மக்களின் அச்சத்தை போக்கும் பணியில் அரசுக்கு உதவ வருமாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுத்தார். உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறைதான் இந்தியாவிலும் பின்பற்றப்படுவதாகவும், கூடங்குளம் மட்டுமல்ல நாட்டின் மற்ற அணு உலைகளிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுவதாகவும், இது பாதுகாப்பானது தான் என்றும், ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்