அதிகாரிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுரை விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில், குனிந்தபடி நின்று பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை, நிமிர்ந்து நின்று பேசுமாறு அமைச்சர் ஜெகதீஷ்வரி அறிவுறுத்தினார். சிவகாசி அருகே நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், அமைச்சரிடம் பேச வந்த முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன், குனிந்தபடி பேசினார். இதை கவனித்த அமைச்சர், நிமிர்ந்து நின்று பேசுங்கள் எனக் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.