அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாக பரவும் ஆடியோ - ஏஐ குரல் என விளக்கம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி தவெக நிர்வாகிக்கு, அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுப்பது போல் வெளியான ஆடியோவிற்கு, ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளனர்...
சாத்தூர் தவெக வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லட்டு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி, கடும் ஆவேசமாக கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.