சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், துணை சபாநாயகர் ரவிசங்கர் தேர்தலில் போட்டியிட தயக்கம் தெரிவித்தபோது, தன்னிடம் ரூ.75 ஆயிரம் மட்டுமே இருப்பதாக கூறியதாக தெரிவித்தார். அதற்கு முதலமைச்சர், “நீ நில், நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறியதாகவும், தற்போது ரவிசங்கர் துணை சபாநாயகராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.