ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.