அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கனாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளாளபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.