அரசியல்

ஆதரவாளர்களை அணி திரட்டுகிறாரா மு.க. அழகிரி? : செப். 5- ல் சென்னையில் அமைதி பேரணி

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடத்துக்கு செப்டம்பர் 5ந் தேதி அமைதி பேரணி நடத்த உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடத்துக்கு செப்டம்பர் 5ந் தேதி அமைதி பேரணி நடத்த உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலையில் இருந்து அன்று காலை பத்து மணிக்கு தொடங்கி கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் இந்த பேரணியில், சுமார் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தம் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த அமைதி பேரணி மூலம் நிரூபித்து காட்டப்போவதாக மு.க. அழகிரி சூளுரைத்துள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்