Manickam Tagore | Congress | மீண்டும் பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர் "எண்ணிய முடிதல் வேண்டும்"- மாணிக்கம் தாகூர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என தொடர்ந்து வலியுறுத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும்" என மீண்டும் எக்ஸ் பக்கத்தில் பாரதியின் வரிகளை பகிர்ந்துள்ளார். கூட்டணி விவகாரத்திலும் ஆட்சி அதிகாரம் குறித்தும் கட்சி தலைமை முடிவு எடுக்கும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்திய போதிலும், மாணிக்கம் தாகூர் தொடர்ந்து 3-ஆவது நாளாக இவ்வாறு பதிவிட்டிருப்பது விவாதத்தை கிளப்பியிருக்கிறது.