அரசியல்

"களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" - கமல் ஆவேசம்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியது குறித்து, கமல் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

தந்தி டிவி

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியது குறித்து, கமல் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன் என்று கூறியுள்ளார். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ள துணிந்தவர் மகேந்திரன் என்று என்று தெரிவித்துள்ள கமல், கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே மகேந்திரனின் சாதனை என்று குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய திறமையின்மையையும், நேர்மையின்மையையும் அடுத்தவர் மீது போட்டு அனுதாபம் தேட மகேந்திரன் முயற்சிப்பதாகவும் கமல் விமர்சித்துள்ளார்.

தன்னை எப்படியும் நீக்கிவிடுவார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு மகேந்திரன் தானாகவே விலகி கொண்டதாகவும்,ஒரு களையே தன்னை களையென்று புரிந்துக்கொண்டு தன்னைத்தானே நீக்கி கொண்டதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்றும், இனி கட்சிக்கு ஏறுமுகம் தான் என்றும் கமல் கூறியுள்ளார். எனது வாழ்க்கையில் அனைத்து விஷயங்களும் வெளிப்படையானவை என கூறியுள்ள கமல் நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளை பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை என்றும், கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை என்றும் தனது அறிக்கையில் கமல் கூறியுள்ளார்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு