அரசியல்

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு...

மத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தி டிவி

மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் இறுதி நிலவரம், இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் உள்ள 230 இடங்களில் 114 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. பாஜகவுக்கு 109 இடங்களும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் ஒரு இடத்தில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

ஏற்கனவே, பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் பெறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், தற்போது காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 3 பேரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் ஆதரவாளர்கள். இதையடுத்து, 117 பேரின் ஆதரவோடு, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. 109 இடங்களுடன் நூலிழையில் ஆட்சியை பறிகொடுத்த பா.ஜ.க., மிகப்பெரிய எதிர்க்கட்சியாக அமருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ