Lorry Accident | கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த லாரி.. TN-KL எல்லையில் பரபரப்பு.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி கேரளம் தமிழகம் எல்லையில் உள்ள சோதனை சாவடியில், கட்டுபாட்டை இழந்த லாரி கடைகளுக்குள் புகுந்தது. அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மின்சார உபகரணங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, கேரள எக்சைஸ் துறையினர் மேற்கொள்ளும் சோதனைக்காக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக லாரியின் பிரேக் ஃபேலியராகி, தானாக முன்னோக்கி நகர்ந்து சாலையோர கட்கள் மீது அதிவேகமாக மோதியது. லாரி திடீரென கடைகளுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினர். விபத்தில் 3 கடைகள் சேதம் அடைந்தன.