அரசியல்

4-ம் கட்டமாக 71 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

மக்களவை தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

தந்தி டிவி

இந்நிலையில், இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதுவரை 3 கட்டமாக மொத்தம் 303 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் நான்காம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் 17 தொகுதிகள் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளுக்கு திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேபோன்று பிகாரில் 5 தொகுதிகளுக்கும் ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளுக்கும் ஜம்மு, காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரம் மேற்கண்ட மாநிலங்களில் உச்சக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்