அரசியல்

"செப்.19-இல் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்" - கே.பி.முனுசாமி தகவல்

வரும் 19ஆம் தேதி மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதிமுகவின் உயர்மட்ட குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் எம்பி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

"செப்.22, 30-ல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம்" - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தகவல்

அதிமுகவின் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வரும் 19 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றார். அதேபோல், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம், வரும் 22ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 30ஆம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்