அரசியல்

கூடங்குளம் அணு உலை - பாதிப்பு இல்லை - மத்திய இணை அமைச்சர் விளக்கம்

கூடங்குளத்தில் 6 அணு உலைகளுக்கும் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கூடங்குளத்தில் 6 அணு உலைகளுக்கும் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கூடங்குளத்தில், 5 மற்றும் 6ஆவது அணு உலைகள் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என்று கூறினார். மேலும், அணுசக்தி ஒழுங்காற்று ஆணையத்தின் பாதுகாப்பு விதிகளின் படி இந்த ஆறு அணு உலைகளுக்கும் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தார்..

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி