அரசியல்

புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி நன்றி... "வளமான புதுச்சேரி அமைய வாழ்த்துகிறேன்"

துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி, புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி, புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார். மாநில மக்களுக்கும், உடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பு மற்றும் தார்மீக பொறுப்பை நிறைவேற்ற தானாற்றிய பணிகள் அனைத்தும் புனிதமானவை எனக் கூறியிருக்கிறார். புதுச்சேரிக்கு பிரகாசமான எதிர்க்காலம் உள்ளது என்றும் அது மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் கூறியிருக்கும் அவர், வளமான புதுச்சேரி அமைய வாழ்த்துவதாக கூறியிருக்கிறார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"