#vanathisrinivasan #khushbu வானதி சீனிவாசனை கட்டி அணைத்து கண்ணீர் வடித்த குஷ்பு கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீடு திரும்பிய கையோடு மீண்டும் தேர்தல் பிரசாரக் களத்திற்குத் திரும்பினார். வெங்கடாபுரம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் பங்கேற்ற நடிகை குஷ்பு, உடல்நலிவுற்ற நிலையிலும் மக்களுக்காகக் களத்திற்கு வந்த வானதி சீனிவாசனைப் பார்த்தவுடன் உணர்ச்சி வசப்பட்டு அவரைக் கட்டி அணைத்துக் கண்ணீர் மல்கத் தனது அன்பை வெளிப்படுத்தினார். இருவரின் இந்த பாசப் போராட்டத்தைக் கண்டு அங்கிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் நெகிழ்ச்சியடைந்தனர்.