#kerala | #keralaassemblyelection2026 மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த கேரள அரசு - தீர்மானம் நிறைவேற்றம் மத்திய பட்ஜெட்டில் கேரளா புறக்கணிக்கப்பட்டதாக கூறி, மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசிடம் 29 கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில், அனைத்தையும் புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டினார். அவையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபரிமலை தங்க கொள்ளை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.