கேரள மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே மறைமுக கூட்டணி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இடுக்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மோடி கட்டுப்படுவதைப் போல, பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கட்டுப்படுவதாகவும் விமர்சித்தார்.