அரசியல்

"கருப்பாக இருப்பதால் இன்னல்களை எதிர்கொண்டேன்" கேரள தலைமைச் செயலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

கருப்பாக இருப்பதால், தான் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக, கேரள மாநில தலைமை செயலாளர் சாரதா முரளீதரன், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாகியுள்ளது. அந்த பதிவில், தனது கணவர் எந்த அளவுக்கு வெள்ளையாக இருக்கிறாரோ, அதே அளவுக்கு, தாம் கருப்பாக இருப்பதாக கூறி தன்னை பலர் விமர்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். தாம் கருப்பாக இருப்பதால், சிறுவயது முதல், தன்னை பெரிய ஆளாக எண்ணியதில்லை என குறிப்பிட்டுள்ள அவர், கருப்பு நிறமும் அழகுதான் என்பதை தனது குழந்தைகள்தான் தனக்கு புரிய வைத்ததாக தெரிவித்தார். கருப்பு என்பது மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே