அரசியல்

காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு, டிரம்ப் அறிவுறுத்தல்? - மோடி பதிலளிக்க வலியுறுத்தி அவையில் காங்கிரஸ் அமளி

காஷ்மீர் விவகாரத்தில் சமாதான பேச்சுக்கே இடமில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காஷ்மீர் விவகாரத்தில் சமாதான பேச்சுக்கே இடமில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே, சமாதானம் செய்து கொள்ளுமாறு பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என கூறி, மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், சமாதானம் என்பது சிம்லா ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும், காஷ்மீர் நமது சுயமரியாதை என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு