அரசியல்

கர்நாடகாவில் 48 மணி நேரத்துக்குள் ஆட்சி கவிழும் - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா நம்பிக்கை

இன்னும் 48 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இன்னும் 48 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலில் போட்டியிடும் தான், நிச்சயம் வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு மீது ஏராளமான எம்எல்ஏ​​க்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் நாளை தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆட்சி கவிழ்ந்து விடும் எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பலர் பாஜக தலைமையுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறினார்.இன்னும் இரண்டு நாட்களில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் அவர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை