அரசியல்

கர்நாடகாவில் 48 மணி நேரத்துக்குள் ஆட்சி கவிழும் - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா நம்பிக்கை

இன்னும் 48 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இன்னும் 48 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலில் போட்டியிடும் தான், நிச்சயம் வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு மீது ஏராளமான எம்எல்ஏ​​க்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் நாளை தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆட்சி கவிழ்ந்து விடும் எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பலர் பாஜக தலைமையுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறினார்.இன்னும் இரண்டு நாட்களில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் அவர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’