அரசியல்

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் - முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்தார்

கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க. 12 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

தந்தி டிவி

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ காரணமான, 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து 15 தொகுதிகளில் கடந்த 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆட்சியை தக்க வைக்க 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா தமது தலைமையிலான ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.இடைத்தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா