அரசியல்

வருமான வரித்துறை சோதனை : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தங்கள் நிறுவனங்கள் மீதான வருமான வரி சோதனைகளை உடனடியாக நிறுத்துமாறு திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தங்கள் நிறுவனங்கள் மீதான வருமான வரி சோதனைகளை உடனடியாக நிறுத்துமாறு திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் எனவும், கடந்த 30ம் தேதி முதல் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். இதையடுத்து, இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி அனிதா சுமந்த், கூறினார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மனுவாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்