அரசியல்

உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஆந்திர முதல்வர் புகார் மனு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 8 பக்க புகார் மனு

உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி

புகார் மனுவில், அமராவதி தலைநகரின் நில முறைகேடு வழக்கிலும், மூன்று தலைநகர வழக்கிலும் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் தலையிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து பல்வேறு வழக்குகளில், அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறியுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, இது தொடர்பாக 8 பக்க குற்றச்சாட்டை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந் பாப்பேக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், செய்தியாளர்களை சந்தித்த அரசு தலைமை ஆலோசகர் அஜய் கலாம், மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்