CM Vijay | Mettur Dam | ``இப்படி ஒரு முதல்வரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை..'' - ``எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை..'' - சேலம் விவசாய சங்க தலைவர் நெகிழ்ச்சி பேட்டி மேட்டூர் அணையிலிருந்து பாசனத் தேவைக்காகத் தண்ணீரைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், தன்னைச் சந்திக்க வந்த விவசாயிகளைத் தம்மோடு அழைத்துச் சென்று அவர்களையும் தண்ணீரைத் திறக்கச் செய்தார். இந்நிலையில், சேலம் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், தான் அணிந்திருந்த பச்சைத் துண்டை முதல்வரின் தோளில் அணிவித்ததாகவும், அதனை அவர் தலைகுனிந்து வாங்கியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த இதுபோன்றதொரு முதலமைச்சரைத் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
#CMVijay #MetturDam #Farmers #DamOpening #Salem #ThanthiTV