வரும் சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடுவதை விட தன்னுடன் பயணிப்பவர்கள் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத் குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தவெக நிர்வாகி அஜிதா தூக்க மாத்திரை உட்கொண்ட சம்பவத்தில், தவெக தலைவர் விஜய் காரில் இருந்து இறங்கி பேசியிருந்தால், இந்த பிரச்சனையே வந்திருக்காது என்று தெரிவித்தார்.