சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த பலர் முயற்சி செய்வதாக கூறினார். மேலும், தமிழகத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இளைஞர்கள் இணைவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.