அரசியல்

10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,.

தென்காசி மாவட்டம் கடைநல்லூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கூடங்குளம் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்த வழக்குகள் அனைத்தும் சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும், சி.ஏ.ஏ போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுகிறது என்றும் கொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,. போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கலவரத்தில் ஈடுபட்டது உள்ளிட்டவை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது எனவும் முதலமைச்சர் கூறினார்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி