அரசியல்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: "ஜாமீன் தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றத்தை அணுக உத்தரவு" - உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்வதில் இருந்து முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.

தந்தி டிவி
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்வதில் இருந்து முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வு, ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது. மேலும் ப.சிதம்பரம் சி.பி.ஐ. நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விசாரணை நீதிமன்றம் ஜாமீன் மறுக்கும் நிலையில் அவரை திகார் ​சிறையில் அடைக்கக் கூடாது என்றும், வியாழக்கிழமை வரை சி.பி.ஐ. காவலில் வைக்கவும் நீதிபதி பானுமதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக 3 நாள் போலீஸ் காவலுக்கு பின்னர், இன்று மதியம் ரோஸ்வேல்யூ நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை ஆஜர்படுத்த உள்ளனர். ப.சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் நிலையில், அது விசாரணைக்கு ஏற்கப்படுமா? அல்லது சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பப்படுவாரா என்பது தெரியவரும். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவால், அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு