சிதம்பரம் வீடு முன் குவிந்த காங். தொண்டர்கள்
இதையடுத்து போலீசார் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர். சிதம்பரத்தை அழைத்து செல்ல சிபிஐ அதிகாரிகள் வரவழைத்த கார் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சிதம்பரம் வீட்டின் முன்பு குவிந்து கோஷம் எழுப்பினர் . டெல்லி போலீசார், காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து, போலீசார் அப்புறப்படுத்தினர்.
டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ப. சிதம்பரம்
நீண்ட நேர பரபரப்புக்கு பின், ப. சிதம்பரத்தை காரில் அழைத்துக்கொண்டு, சிபிஐ தலைமை அலுவலகத் திற்கு விரைந்தனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள், காரை வழி மறித்ததால், மீண்டும் பரபரப்பு நிலவியது. தற்போது சிபிஐ தலைமை அலுவலகத்தில் ப. சிதம்பரத்திடம் அதிகாரிகள், விசாரணையை துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.