அரசியல்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம் - சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

தந்தி டிவி

சிதம்பரம் வீடு முன் குவிந்த காங். தொண்டர்கள்

இதையடுத்து போலீசார் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர். சிதம்பரத்தை அழைத்து செல்ல சிபிஐ அதிகாரிகள் வரவழைத்த கார் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சிதம்பரம் வீட்டின் முன்பு குவிந்து கோஷம் எழுப்பினர் . டெல்லி போலீசார், காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து, போலீசார் அப்புறப்படுத்தினர்.

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ப. சிதம்பரம்

நீண்ட நேர பரபரப்புக்கு பின், ப. சிதம்பரத்தை காரில் அழைத்துக்கொண்டு, சிபிஐ தலைமை அலுவலகத் திற்கு விரைந்தனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள், காரை வழி மறித்ததால், மீண்டும் பரபரப்பு நிலவியது. தற்போது சிபிஐ தலைமை அலுவலகத்தில் ப. சிதம்பரத்திடம் அதிகாரிகள், விசாரணையை துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்