குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இலங்கை அகதிகளும் சேர்க்கப்பட வேண்டும் என சிவசேனா தெரிவித்தது. மக்களவையில் இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய சிவசேனா எம்.பி. விநாயக் ரவுத், ஆப்கானிஸ்தானின் பெயரை இதில் சேர்த்தது ஏன் என புரியவில்லை என்றார். ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டிருந்தால், இலங்கை அகதிகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அவர், இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் நல்லது என்றார்.