அரசியல்

தடையை மீறி பேனர் : தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ்...

தடையை மீறி பேனர்கள் வைத்ததாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தந்தி டிவி
சென்னை உயர்நீதிமன்றம் பேனர்கள் வைக்க இடைக்கால தடை விதித்தும், இந்த உத்தரவை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மதிக்கவில்லை எனக் கூறி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்ட நீதிபதிகள் அதிமுக, திமுக, உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்